Monday, May 29, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

கடிதத்தின் மூன்றாம் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 4
***************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

பொறியியற் படிப்பு முடிந்ததும், உனக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது. நான் சில மாதங்கள் மும்பையில் ஒரு நுண்ணணுவியல் பத்திரிகையில் பணி புரிந்து விட்டு பின் பெங்களூரில் ஒரு பொது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மீண்டும், அரட்டை, சினிமா, ஊர் சுற்றல் என்று மாலைப் பொழுதுகளை ஜாலியாகக் கழித்தோம். கல்லூரிக் காலத்தில், வந்தனாவைப் பற்றிய உனது உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத நீ, ஓர் இரவுக் காட்சி பார்த்து விட்டு திரும்பும்போது, ஓர் இந்திரா நகர் பூங்காவில் அவள் மேல் உனக்கிருந்த காதலை ஒப்புக் கொண்டாய். அக்காதலை சில காரணங்களுக்காக அவள் நிராகரித்ததையும் சுயபச்சாதாபத்துடன் கூறினாய். அந்த நேரம் ஒரு புதியவனாக நீ எனக்குத் தோன்றினாய்! அந்த புறக்கணிப்பு உன்னிடம் ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

அந்த இந்திரா நகர் பூங்காவில், பெங்களூரின் குளிரிரவுப் பொழுதுகளில், கலீல் கிப்ரான் கவிதைகள், உன் ஆன்மீகத் தேடல்கள், எதிர்கால லட்சியங்கள், அப்போது நீ ஈடுபட்டிருந்த மென்பொருள் உருவாக்கம் என்று பல விடயங்கள் குறித்து ஒரு வித லயிப்புடன் நீ பேசியதை, நேரம் போவது தெரியாமல் நான் கேட்டிருக்கிறேன்! உனக்கு நினைவிருக்கிறதா ? பிரிகேட் சாலையில் இருந்த "The Pub"-இல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு வைர வியாபாரியிடமும், அவரது ஆப்பிரிக நண்பரிடமும் உன்னை நீயே அறிமுகப்படுத்திக் கொண்டு, உன் பேச்சுத்திறனை மூலதனமாக்கி, அவர்களை குடுவை குடுவையாக பீரும், நொறுக்குத் தீனியும் வாங்கித் தர வைத்த உன் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்ல !

நான் ONGC-யில் வேலை நிமித்தம் மீண்டும் மும்பை சென்று விட்ட பின், ஒரு சில அற்புதமான கடிதங்களை எனக்கு நீ எழுதியிருக்கிறாய். அவை, இன்னும் என் வசம் பத்திரமாகவே உள்ளன. உன் சுபாவத்திற்கு தகுந்தாற் போல், பெங்களூர் வேலையை உதறி விட்டு, சென்னையில் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தாய். பணி நிமித்தம் நீ ஒரு தடவை (1987) மும்பை வந்தபோது ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, உன்னை நான் இதுவரை பார்க்கவில்லை. நீ எங்கிருக்கிறாய் என்பதை நான் அறிந்தும், நமது அடுத்த சந்திப்பிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு !

உன்னைப் பற்றி சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரியப் பெற்றேன். புட்டபர்த்தி சாய்பாபாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட நீ, புட்டபர்த்தியில் அமைந்துள்ள 'Sai Institute of Technology' யில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தது பற்றியும், சாய்பாபாவின் நேர்காணலுக்காக பல லட்சம் பேர் காத்திருந்த வேளையில், அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க, அவரிடம் பேச உனக்களிக்கப்பட்ட சலுகை குறித்தும், அங்கு ஆன்மீகத்தில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்தது குறித்தும் கேள்விப் பட்டேன்.

நீ எனக்குப் பரிசாக வழங்கிய ஒரு புத்தகத்தில் நீ எழுதிக் கொடுத்த "BETWEEN HERE AND THERE, IS ETERNITY, BETWEEN NOW AND THEN, IS INFINITY!" என்ற அற்புதமான வாசகத்தை நினைவு கூர்ந்து இந்த மடலை நிறைவு செய்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
**********************************

EPILOGUE:

நண்பன் நாராயணன் IES-இல் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தொலைப்பேசித் துறையில் சீனியர் டிவிஷனல் பொறியாளராக உயர்ந்து, பின் அதை விடுத்து, தற்போது பூனாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். ஆனால், பேச்சில், அடக்கத்தில் அதே பழைய 'நாரி' தான்!

'மொட்டை' ஷியாம், ஓமானில் சில ஆண்டுகள் வேலை செய்து விட்டு, தற்போது Bahwan's குரூப்பைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் உயர் பதவியில் இருக்கிறான். இன்றும் சனி ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாடுகிறான்!

'Badoo' என்கிற செல்வராஜ் சிறிது காலம் HCL-இல் பணி புரிந்து விட்டு, கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் தன் மனைவியோடும் (அவனது மாமா பெண் தான்!) இரு மகள்களோடும் வாசம் செய்கிறான்! ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் டைரக்டராக வேலை!

GS என்கிற ஸ்ரீராம் மும்பையில் சில வருடங்கள் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று MS படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, திருமணமாகி, மனைவியுடனும், மகனுடனும், முன்போலவே நண்பர்களிடம் 'கடி' ஜோக்குகள் சொல்லிக் கொண்டு, டென்வரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.

'Vasco' என்கிற வசந்த்குமார், IIM, கல்கத்தாவில் மேலாண்மை படிப்பை முடித்து, பின் NIIT-இல் பணி புரிந்தபோது ஒரு முறை சிறந்த மேலாளருக்கான விருது வென்று, பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பெற்று, தற்போது கலிபோர்னியாவில் 'ORACLE' நிறுவனத்தில் ப்ராஜெக்ட் டைரக்டராக இருக்கிறான். தலைமுடியில் முக்கால்வாசி இழந்திருந்தாலும், குணத்தில் அதே பழைய வசந்த் தான்!

'ராம்ஸ்' என்கிற ராமச்சந்திரன் சிறிது காலம் ISRO நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, MS படிக்க அமெரிக்கா சென்றதிற்கு பின்னால் அவனுடன் தொடர்பு இல்லை. அவன் ஹிப்பி வாழ்க்கை வாழ்வதாக நண்பன் ஒருவன் மூலம் கேள்விப் பட்டேன்.

எங்களுக்கு வகுப்பெடுத்த LP மேடம் இப்போது GCT கல்லூரியில் நுண்ணணுவியல் துறைக்கு தலைவராக உயர்ந்துள்ளார்!

இறுதியாக, எனது இந்த மிக நீண்ட கடிதத்தின் நாயகனான, என்னுயிர் சிநேகிதன் ப்ரீதம் இன்று உயிருடன் இல்லை! எங்களது கடைசி மும்பை சந்திப்பு (1987) நிகழ்ந்து பல மாதங்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு விடுமுறைக்காக வந்தேன். அவன் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்ட செய்தியை Obituary-யில் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! நானும் ஷியாமும் அவன் தாயாரை சந்தித்துப் பேசியபோது, பெங்களூர் ஒயிட்·பீல்ட் அருகே ஒரு வேனில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே ப்ரீதம் உயிரிழந்ததை அவர் கண்ணீருடன் கூறினார். நெற்றியின் பக்கவாட்டில் கூர்மையான ஏதோ ஒன்று துளைத்த ரத்தச் சுவடோடும், வலியை வென்ற மெல்லிய புன்னகையைத் தேக்கிய உதடுகளோடும் ப்ரீதம் இறந்து போனதையும், அதே வேனில் பயணம் செய்த தான் காயங்களோடு உயிர் பிழைத்ததையும் சொல்லி அவர் கலங்கியபோது, கடவுள் மீதே அசாத்திய கோபம் வந்தது. ப்ரீதம் தனது டைரியில் கடைசியாகப் பதித்திருந்த, "THIS LIFE IS LIKE WALKING ON A RAZOR'S EDGE!" என்ற வாசகம் என் நெஞ்சில் ஒரு வடு போல் தங்கி விட்டது.

ப்ரீதம் இறந்த சில மாதங்களில், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற வந்தனாவும், ஒரு கோரமான கார் விபத்தில் இறந்து போனதை என்னவென்று சொல்வது !

(முற்றும்)

தோழனுக்கு ஒரு கடிதம் --- Part III

இப்பதிவை மீள்பதிவு செய்வதற்கு காரணங்கள் இரண்டு:

1. கடிதத்தின் இந்த மூன்றாவது பகுதியை பதித்து சில வாரங்களாகி விட்டதால், திடீரென்று இதன் இறுதிப் பகுதியை பதிக்க விரும்பவில்லை !

2. இந்த கடிதத்தின் "இறுதி அத்தியாயத்தை" இன்று மாலைக்குள் எழுதி பதித்து விடுகிறேன் !

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- Concluding Part of this letter will be published today evening.

Saturday, May 06, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3

முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 3
****************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

கலை நிகழ்ச்சி மேடைகளில் ஏறியவுடன், ஏதோ ஒரு சக்தி உன்னை ஆட்கொண்டதை நான் உணர்ந்திருக்கிறேன். AD-APT என்று அழைக்கப்பட்ட ஒரு கலை நிகழ்ச்சி உனக்கு நினைவிருக்கிறதா ? அது, பொருட்களை வித்தியாசமாக, சுவைபட, ஒரிஜினல் விளம்பரங்களை நையாண்டி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாகும். அதில் உன்னுடன் பங்கேற்ற நம் நண்பர்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் விளம்பரக் குரலாக இருந்த, சரீரத்திற்கும் சாரீரத்திற்கு சம்மந்தமே இல்லாமல் கணீரென்ற குரல் கொண்ட, கல்லூரியில் இருந்த பெண்களெல்லாம் தங்களது உடன்பிறவாச் சகோதரனாக பாவித்த, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவனான 'நாரி' என்ற நாராயணன், "A short man with a high stature" என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்!

'Badoo' என்கிற செல்வராஜ் தான் எவ்வளவு அழகாக சித்திரங்கள் வரைவான்! அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு குறைவிருக்காது.

'Vasco' என்கிற வசந்த்குமார், ஒரே சமயத்தில் GRE, TOEFL, GATE, CAT என்று பல தேர்வுகளையும் எதிர்கொண்டு அனைத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்!

GS என்றழைக்கப்பட்ட ஸ்ரீராம், எந்த திரைப்பட பாடலானாலும், கேள்வி ஞானத்திலேயே, அப்பாடலுக்கு அடிப்படையாக அமைந்த கர்னாடக ராகத்தை எளிதில் கண்டுபிடித்து விடுவான். அவன், விகடனின் 'மாணவர் பத்திரிகையாளராக' நம் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவனும் கூட !

ஒரு குழுவாக, நீங்கள் AD-APT-இல் நடித்துக் கலக்கியதை நினைத்துப் பார்த்தால், இன்றும் சிரிப்பு வருகிறது. அந்நிகழ்ச்சியில் டார்ஸான் ஏதோ ஒரு டானிக்கை சாப்பிட்டதால் அவனுக்கு உண்டான உடல் வலிமைக்கு சான்றாக வரும், "When Tarzan farts, the whole jungle stinks" என்ற ஒரு வாசகத்தை கேட்டு அன்று கல்லூரி அரங்கமே அதிர்ந்தது !!!


மற்றொரு கலை நிகழ்ச்சியான MOCK PRESS-இல் (ஒரு பிரபலமான நபரைப் போல் ஒருவர் வேடமேற்று சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஒரு பத்திரிகையாளர் குழு கேட்கும் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கும் நிகழ்ச்சி அது!) நீ ஒரு முறை கர்னல் கடா·பியாகவும், மற்றொரு முறை சாத்தானாகவும் வேடமேற்று பிரமிக்கத்தக்க வகையில் நடித்து, கேள்விகளை திறமையாக எதிர் கொண்டு அசத்தினாய். நீயும், நடிகர் சத்யராஜ் போலவே நெகடிவ் கேரக்டர்களில் பரிமளித்தவன்! சாத்தானாக நீ மேடையேறியவுடன், பார்வையாளர் மத்தியில் சாத்தானின் பக்தன் போல் நீ செட்டப் செய்திருந்த நண்பன் பாடலிநாதன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு, மேடையை நோக்கி விரைந்து உனக்கு சூடம் காட்டி, "ஓ சாத்தானே, எனக்கு அருள் பாலியுங்கள்!" என்று உன்னைப் பணிந்தது பயங்கர கலகலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நீ மேடையில் செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது!

பத்திரிகையாளர் குழுவில் இடம் பெற்ற வேதியியல் ஆசிரியரின் தலையில் நீ கை வைத்து, " Satan bless you!" என்று ஆசீர்வதித்து அவரை மிரள வைத்தாய். அது மட்டுமா, பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருந்த ஜுனியர் மாணவி வந்தனா (அழகும், திறமையும், பணமும் ஒரு சேர அமையப் பெற்றவரிடம் காணப்படும் ஒரு மெல்லிய அகந்தை அவளிடமும் இருந்தது. உனக்கும் கொஞ்சம் ஈகோ உண்டல்லவா? அதனால், you had a love-hate relationship with her) பக்கம் திரும்பி காமப்பார்வையுடன் (உன் நடிப்பைத் தான் சொல்கிறேன், கோபிக்காதே!), "Hi, beauty! What is your name ?" என்று வினவினாய்! பதில் சொல்ல எழுந்த வந்தனாவை, "You are ugly! I was asking the girl next to you!" என்று இடைமறித்து எரிச்சல் கொள்ள வைத்தாய்.

நிகழ்ச்சி முடிந்ததும், வந்தனா எங்களிடம், "He was a bit too much on stage, today!" என்று பொரிந்ததையும், அதற்கு வேதியியல் ஆசிரியர், "No, Preetham was actually three-much, today!" என்று நகைச்சுவையாகக் கூறியதையும், உன் நடிப்புக்குக் கிட்டிய பாராட்டாகவே நான் பார்க்கிறேன்!

நாம் மூன்றாமாண்டு பயில்கையில், இலங்கைப் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதனால், நம் கல்லூரி நிர்வாகம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றியது. சென்னைக்குச் செல்ல விரும்பாமல், நான், நீ, துரைராஜ், ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் ஆகியோர், நண்பன் செல்வராஜுடன் குன்னூருக்கு மேல் அமைந்துள்ள பேலிதளா (Belidala) என்ற அவனது சொந்த கிராமத்துக்கு பயணப்பட்டது உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும்.

அப்போது நாம் மேற்கொண்ட வனப்பயணம் (நானும், ராம்ஸ¤ம் சேற்று மணலில் வழுக்கி, ஓர் ஐம்பதடி கீழிருந்த பாறைப் பரப்பில் விழ இருந்தோமே!), நாம் கலந்து கொண்ட செல்வராஜ் (படுகர் இன) இல்லத் திருமணம், நமக்கு அங்கு கிடைத்த உற்சாகமான மரிதையான வரவேற்பு, சைட் அடித்த செல்வாவின் அழகான மாமா/அத்தைப் பெண்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பில் உற்சாக பானங்கள் என்று எல்லாம் சேர்ந்து அது வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பயணம் ஆனது, இல்லையா !

பொறியியற் படிப்பு முடிந்து, நாம் இருவரும் பெங்களூரில் சிறிது காலம் ஒன்றாகச் சுற்றினோமே, அந்த நாட்களையும் என்னால் மறக்க இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

தேர்தல் 2006 - பிரச்சாரமும் வாக்குறுதிகளும்

1. தமிழ்நாட்டின் 2 பெரிய கட்சிகளும், இலவச கலர்டிவி / கணினி, 2 ரூபாய் / இலவச அரிசி, திருமணத்திற்கு 15000 ரூபாய் / 4 கிராம் தங்கம், விவசாயிகளுக்கு கடன் ரத்து, பல தரப்பினருக்கும் சலுகைகள், வேலை வாய்ப்பு, இலவசமாக விளைநிலம் ... என்று வரைமுறை இன்றி வாக்குறுதிகளை அள்ளி விட்டு, இன்னும் சில வருடங்களில் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடும் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சில கேள்விகள் எழுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால், மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் தானே :) "இலவசத்திலேயே" வாழ்க்கையை ஒட்டி விடலாமே ???

ஆட்சிக்கு வரும் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அக்கட்சியின் மேல் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிவகை செய்வது அவசியமில்லையா ? ஏதாவது வகையில் தண்டனை அவசியமாகிறது இல்லையா ?

வாக்கு கொடுத்து விட்டு, நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா ?

உச்சநீதி மன்றமும், தேர்தல் ஆணையமும், பாராளுமன்றமும் இதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க முன் வரவில்லை ? இது குறித்து ஆலோசனை செய்வது அவர்கள் கடமை இல்லையா ?

மொத்த பட்ஜெட்டையே தேர்தல் வாக்குறுதிகளாக்கி விடுவது அபத்தமில்லையா ?

இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை இளிச்சவாயர்கள் என்று அரசியல்வாதிகள் நினைப்பார்கள் ?

பொதுவாக, மக்கள், கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை வைத்துத் தான் வாக்களிக்கிறார்களா ?


பதில் கூறுங்கள், நண்பர்களே !

2. மீடியா (அதாவது, சொந்தமாக டிவி, தினசரி) பலம் இல்லாத மற்ற கட்சிகள், தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் செய்யும் பிரச்சாரத்திற்கு நடுவே காணாமல் போய் விடுகிறார்கள். அதனால் அவை, இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. அதனாலோ என்னவோ, தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது !!! தேர்தல் ஆணையம், டிவி வழி பிரச்சாரத்திற்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தில், எல்லா கட்சிகளின் பிரச்சாரமும் மக்களை சரியாக சென்றடைவது அவசியமாகிறது இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, April 15, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2

முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************

என் அன்புக்குரிய ப்ரீதம்,

முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!

அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!

சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!

நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!

உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)

சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !

உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!

கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


--- மடல் இன்னும் விரியும்!

Friday, April 14, 2006

சரத் - தவமாய் தவமிருந்து

*********************
*********************
*********************
*********************
*********************
தீபாரமணி என்ற அந்த தாயின் முதல் விமானப் பயணம் மிக்க பெருமை வாய்ந்ததாக அமைந்ததன் காரணம், அவரது தனயனின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும் என்றால் அது மிகையாகாது ! இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாதில் (IIM-A) படித்துப் பட்டம் பெற்ற சரத்பாபு என்ற அவரது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அல்லவா அது !

மடிப்பாக்கத்தின் அருகில் ஒரு குப்பத்தில் , மிகச்சிறிய ஒரு கூரை வீட்டில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்க்கப்பட்ட சரத், வாழ்வில் உயரத் துடிக்கும் பல ஏழை மாணவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சரத் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில், தீபாரமணி ஒரு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், தினம் 30 ரூபாய் கூலிக்கு சமையல் புரிபவராகவும், பின்னர் SSLC முடித்து ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கிறார். சொற்ப வருமானத்தில் தனது நான்கு பிள்ளைகளை பராமரிக்க இயலாத சூழலில், வீட்டில் உணவுப் பண்டங்கள் தயாரித்தும், சரத் மூலம் அவற்றை தெருக்களில் விற்றும், அவர் வீட்டுச் செலவை ஈடு கட்ட வேண்டி இருந்தது.

சரத், கிங்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தபோது, எப்போதும் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தது, அவரது தாயாரின் கடும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமானதாகத் தோன்றவில்லை என்று கூறலாம் ! வீட்டில் மின்சாரம் இல்லை என்பதைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காமல், படிப்பை மட்டுமே தன் மூச்சாக எண்ணிய சரத்திற்கு ஊக்கமளித்த அவரது ஆசிரியர்கள், அவரது படிப்புக்கான செலவையும் ஏற்றனர்.

பின்னர் சரத், BITS, பிலானியில் பொறியியற் படிப்பு படித்தபோது, அணிவதற்கு நல்ல உடைகள் கூட அவரிடம் கிடையாது; அதை அவர் பொருட்படுத்தியதும் இல்லை ! அரசாங்க உதவி மற்றும் கடன் பெற்று பொறியியற் படிப்பை முடித்த சரத், Polaris நிறுவனத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். தனது கடன்களை அடைத்த பின்னர், CAT என்றழைக்கப்படும் IIM நுழைவுத் தேர்வுக்கு (இத்தேர்வு எவ்வளவு கடினமானது என்பது பெரும்பாலோர் அறிந்தது தான்!) தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்தார். முதல் முறை மிக நன்றாக எழுதியும், தேர்வுக்கான கேள்விகள், தேர்வுக்கு முன்னரே வெளியான குளறுபடியால், சரத் தேர்ச்சி அடைய முடியாமல் போனது. மனம் தளராமல், இரண்டாம் முறை தேர்வெழுதி அபார மதிப்பெண்கள் பெற்றதால், இந்தியாவில் உள்ள ஆறு இந்திய மேலாண்மைக் கழகங்களிலிருந்தும் அவருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது !!!

மறுபடியும், படிப்புக்காக, கல்வி மானியத்திற்கு மேல் கடனும் வாங்க வேண்டியிருந்தது. இன்று, அகமதாபாதில் சரத் தொடங்கியுள்ள Food King Catering Services என்ற சிறிய நிறுவனத்தின் தொடக்க விழாவில், IIM-A யின் சேர்மனும், INFOSYS நிறுவனத்தின் தலைவருமான திரு.நாராயணமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சரத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் ! சரத் வாழ்வில் மென்மேலும் உயர நமது வாழ்த்துக்களைக் கூறுவோம்.

"என்ன தவம் செய்தீர்கள் அம்மா, இத்தகைய தவப்புதல்வனை ஈன்றெடுக்க!" என்று தான் அந்த உன்னதப் பெண்மணியை கேட்கத் தோன்றுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
நன்றி: இந்து நாளேடு

Saturday, April 08, 2006

GCT கல்லூரி --- மலரும் நினைவுகள்

தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part I
*******************************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,

உனது நட்பின் உன்னதத்தில் திளைத்த அந்த நாட்களை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பறவைகள் ஒலி எழுப்பும் வனாந்திரத்தில், ஈரமான காலைப்பொழுது தரும் உளம் நிறை உற்சாத்தோடு, சிறு குழந்தையின் கரம் பிடித்து நடை பயிலும் உணர்வு எனக்கு !!

23 வருடங்களுக்கு முன்பு நடந்த நமது அந்த முதல் சந்திப்பு பளிச்சென்று நினைவில் நிற்கிறது. என் பெயர் இரண்டாவது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றதால், நான் சற்று தாமதமாகத் தான் (வகுப்புகள் தொடங்கிய பின்) பொறியியற் கல்லூரியில் (GCT) சேர முடிந்தது. கல்லூரியில் சேர்வதற்கான ·பார்மாலிட்டிகளை முடித்து, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்து சேர மதியம் மேல் ஆகி விட்டது. விடுதியில் அவ்வளவாக ஆள் அரவமில்லை. சற்று நேரத்தில் முதலாண்டு மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வரத் தொடங்கினர். முதலில் வந்த சிலரிடம் நானே வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்திற்கு பின், புயல் போல் அவ்விடத்திற்கு வந்த நீ, குட்டைச் சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து, பொதுவாக, "என்னப்பா, எதைப் பத்தி குரூப் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்க ?" என்று வினவிய பின், கூட்டத்தில் புதியவனான என்னைப் பார்த்தவுடன் மலர்ச்சியோடு கையை நீட்டி, "Hi, I am Preetham from Madras, You must be from Madras, too !" என்று கூறி, நான் நீட்டிய கையைப் பற்றி குலுக்கினாய். அந்த இறுக்கமான கை குலுக்கலே, நம்மிடையே பின்னாளில் மலர்ந்த இறுக்கமான நட்புக்கு அச்சாரமாய் அமைந்தது !!!

பழகப் பழக நாம் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது ஓர் அறைக்கு இரு மாணவர்கள் என்றிருந்தனர். என்னை உன் (unofficial) ரூம்மேட் ஆக்கிக் கொள்வதற்காக, உன் ரூம்மேட் வாசுவை அறையிலிருந்து அப்புறப்படுத்த நீ எடுத்த பிரயத்தனங்களை சொல்லி மாளாது ! ஆரம்பத்திலிருந்தே உன்னைக் கண்டு சற்று மிரண்டிருந்த அவன், தன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, அவனைப் போல் அமைதியாக இருந்த மாணவர்கள் தங்கியிருந்த அறையில் மூன்றாவது ஆளாக தஞ்சமடைந்தான். நான் உன் 'சக அறையர்' ஆனேன் (ஆக்கப்பட்டேன்!) !!! என் official ரூம்மேட் 'மொட்டைப்'பழனி தனிக்காட்டு ராஜா ஆனான் !!!

கல்லூரி வாழ்வின் பல சமயங்களில் வெளிப்பட்ட உன் பலவித திறமைகளைக் கண்டு வியக்காத நண்பர்களே இருக்க முடியாது. மொத்தத்தில் எங்களிடையே ஒரு சூப்பர் ஸ்டார் போல் நீ விளங்கினாய் !!! ஆங்கிலத்தில் நல்ல புலமை உனக்கிருந்தது. ஆங்கிலத்தில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுவாய், கவிதைகள் புனைவாய். ஆங்கிலப் பேச்சு போட்டிகளில் மடை திறந்தாற் போல் முழங்கி பல முறை பரிசுகள் வென்றிருக்கிறாய் !

படிப்பிலும் நீ கெட்டிக்காரன் தான். கேள்வி ஞானம் மிக்கவனாக நீ விளங்கியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! தேர்வு சமயங்களில், நானும் நீயும் ஒன்றாக படிப்போம். பல நேரங்களில் என்னை சத்தமாக படிக்கச் சொல்லி, மெத்தையில் கண் மூடி சயனித்தபடி நான் கூறுவதை உள்வாங்கிக் கொண்டு, சரியாக பன்னிரெண்டு அடித்தவுடன் குட்நைட் சொல்லி நீ உறங்கச் சென்று விடுவாய் !!! நானோ தொடர்ந்து காலை நான்கு மணி வரை படித்துக் கொண்டிருப்பேன். என் கடின உழைப்பின் பலனாக மொத்தத்தில் உன்னை விட மூன்று அல்லது நான்கு மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது கூட என் பாக்கியமே !!! நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் என்னை விட நீ தான் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறாய், நண்பா !!!

ஆங்கில இசை வீடியோக்களை பார்த்தே திறமையாக நடனம் ஆடக் கற்று, கல்லூரி கலை விழா ஒன்றில் அற்புதமாக நடனமாடி நீ பரிசு வென்றது என் நினைவில் பசுமையாக உள்ளது! விளையாட்டுகளிலும் நீ கலக்கியிருக்கிறாய், கிரிக்கெட் தவிர! ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தடகளம், வாலிபால் என்று பல விளையாட்டு அணிகளிலும் இடம் பெற்று உன் திறமையை காட்டியிருக்கிறாய்.

ஆனால், கிரிக்கெட் அணி கேப்டன் 'மொட்டை' ஷியாமுடன் ஒரு தடவை மல்லுக்கு நின்று, அணியில் சேர்ந்து, துவக்க ஆட்டக்காரனாக களமிரங்கி, கண்மூடித்தனமாக மட்டையை வீசி, முதல் பந்திலேயே நடு ஸ்டம்பை இழந்து பரிதாபமாக நின்றது, ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது :) அதே போல, ஷியாம், ஒரு முறை, நம் கல்லூரி சார்பில் களமிரங்கி, உடுமலைப்பேட்டை கிரிக்கெட் கிளப்புக்காக அப்போது விளையாடிக் கொண்டிருந்த ராபின் சிங்கின் (அவர் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்!) பௌலிங்கை அனாயசமாக எதிர்கொண்டு எடுத்த மின்னல் வேகச் சதத்தையும் என்னால் மறக்க முடியாது
!!!

நான் இன்று ஆங்கிலத்தில் ஓரளவு திறமையாக எழுதவும், பேசவும் செய்வதற்கு, நான் அன்று உன்னோடு பார்த்த பல ஆங்கில திரைப்படங்களும், நீ படிக்கத் தந்த புத்தகங்களும் காரணமாக அமைந்தன. உன்னிடமிருந்து, வாசிப்பனுபவம், அவைக்கஞ்சாமை, தியானம், தன்னம்பிக்கை, மனவுறுதி என்று பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு Richard Bach, Somerset Maughm, Kahlil Gibran, Aurobindo, Ayn Rand போன்றோரை அறிமுகப்படுத்தியவனும் நீயே !

ஆனால், உன்னுடன் சேர்ந்து வாழ்வதென்பது என்னைப் போன்ற ஒரு சாதாரணனுக்கு கடினமான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஏனெனில், 'எதையும் ஒரு முறை' செய்து பார்ப்பதும், extremes-களில் நினைத்தபோது நிலை கொண்டு வாழ்வதும் உனக்கு மட்டுமே இயல்பானவை !!! ஒரு நான்கு மாதங்கள், வகுப்புகள், உடற்பயிற்சி, தியானம், கோயில்கள், படிப்பு, நேரத்துக்கு உறக்கம் என்று யாருடனும் அதிகம் உறவாடாமல் ஒரு யோகி போல் வாழ்வாய் ! திடீரென்று ஒரு நாள் அவையனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பாட்டு, கூத்து, நண்பர்களுடன் அரட்டை, இரவுக் காட்சிகள், உற்சாக பானங்கள், உச்சக்கடலை என்று உல்லாச வாழ்க்கைக்கு தாவி விடுவாய் ! அவ்வாறு உன் வாழ்க்கை முறையை நீ அடிக்கடி மாற்றுவது எனக்கு போகப்போக பழகி விட்டது. ஒரு சமயத்திலும், எதையும் என் மேல் நீ திணித்ததில்லை, எதற்கும் என்னை நீ வற்புறுத்தியதுமில்லை !!!

முதலாண்டில் நாம் பயில்கையில் அடிக்கடி நடந்தேறும் 'கல்லெறி வைபவம்' உனக்கு ஞாபகம் வருகிறதா ?

என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************************
--- மடல் இன்னும் விரியும் !

Sunday, March 12, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 7-வது பதிவு

1. மேலாளர் vs பொறியாளர்

மேலாளர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு ஒரு கொடிக்கம்பத்தின் உயரத்தை அளக்கும் பணி தரப்பட்டது. உடனே, அம்மேலாளர்கள் ஏணிகளையும், அளவு நாடாக்களையும் எடுத்துக் கொண்டு கொடிக்கம்பத்திற்கு விரைந்தனர்! அவர்கள் ஏணிகளில் ஏறி விழுவதும்,அளவு நாடாக்களை நழுவ விடுவதும் என்று அந்த இடத்தையே களேயபரம் செய்த வண்ணம் இருந்தனர் !

அப்போது அப்பக்கம் வந்த ஒரு இளம் பொறியாளர், அம்மேலாளர்கள் எதற்காக முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கொடிக்கம்பத்தை நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து, அதை படுத்த வாக்கில் நிலத்திலிட்டு அளவெடுத்து, அளவை மேலாளர் ஒருவரிடம் கூறினார்.

அவ்விடத்தை விட்டு அப்பொறியாளர் அகன்றவுடன், மேலாளர்களில் ஒருவர், இன்னொருவரைப் பார்த்து சிரித்தபடி கூறினார், "இப்படித் தான் பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள் ! நாம் உயரத்தை அளக்கக் கேட்டால், அவர்கள் நீளத்தை அளந்து தருவார்கள்" !!!!!

மேலே சொன்ன குட்டிக் கதையின் நீதி என்ன ???
***************************************************

2. வேறுபடும் கருத்துப் பரிமாற்றத் திறன் !

ஒரு ப்ராஜெக்ட் குறித்து மென்பொருளாளர் தன் ப்ராஜெக்ட் லீடரிடம்:

இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்யவே இயலாது ! தற்போதுள்ள டிசைனில் பெரிய மாற்றம் செய்ய வேண்டுவதோடு, இந்த பழமையான சிஸ்டம் குறித்த அறிவு நம் அணியில் ஒருவருக்கும் கிடையாது ! மேலும், அந்த சிஸ்டம் எழுதப்பட்ட கணினி மொழியில் நம்மில் யாருக்கும் பயிற்சி கிடையாது. இது போன்ற ப்ராஜெக்டை நம் நிறுவனம் ஏற்கவே கூடாது என்பதே என் கருத்து !

ப்ராஜெக்ட் லீடர் தன் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுகிறது. இம்மாதிரி வேலைகளில் நம் அணியினர் எவருக்கும் அனுபவம் இல்லை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி மொழி குறித்து அணியினருக்கு பயிற்சி தருவது அவசியமாகிறது! இந்த ப்ராஜெக்டை மேற்கொள்ள நாம் தற்போது தயாராக இல்லை என்பதே என் கருத்து !

மேலாளர் முதல் நிலை மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுவதோடு, இம்மாதிரி வேலைகளில் நமக்கு அனுபவம் குறைவு! நம் நிறுவனத்தில் இந்த ப்ராஜெக்ட் வேலையை எடுத்துச் செய்ய வல்ல, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் அதிகம் இல்லை! இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்ய இயலும், ஆனால் கால அவகாசம் சற்று அதிகம் தேவைப்படும் என்பதே என் கருத்து !!!

முதல் நிலை மேலாளர் சீனியர் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்ட் வேலை ஒரு டிசைன் மறுவடிவமைப்பு குறித்தது! இம்மாதிரி வேலைகளைச் செய்ய நம் நிறுவனத்தில் சிலர் உள்ளனர், இன்னும் சிலருக்கு, இதற்குத் தேவையான கணினி மொழி குறித்த அனுபவம் உள்ளது. இவர்கள், பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும்! இந்த ப்ராஜெக்டை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும், சற்று எச்சரிக்கையோடு, என்பதே என் கருத்து!

சீனியர் மேலாளர் நிறுவன முதல்வரிடம்:

இந்த ப்ராஜெக்ட், இது போன்ற டிசைன் மறுவடிவமைப்பில் ஏற்படும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொள்ள வல்ல, நமது நிறுவனத்தின் திறனை, நமது போட்டியாளர்களுக்கும், பிறருக்கும் பறைசாற்றும்! இதற்கு வேண்டிய திறன்களும், இதை வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய ஆட்களும் நம்மிடம் உள்ளனர்! நம்மில் அனுபவமிக்க சிலர், இந்த ப்ராஜெக்ட் வேலைக்குத் தேவையான பயிற்சியை, இன்னும் பலருக்கு, ஏற்கனவே அளித்து விட்டனர்! எனவே, இம்மாதிரி ப்ராஜெக்ட் நம் கையை விட்டு நழுவ நாம் கண்டிப்பாக விடக் கூடாது என்பதே என் கருத்து !!!!!


நிறுவன முதல்வர் வாடிக்கையாளரிடம்:

எங்கள் நிறுவனம், இது போன்ற ப்ராஜெக்ட்களை பல பெரிய வாடிக்கையாளர்களுக்கு பல முறை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது! இம்மாதிரி சவாலான வேலைக்கு எங்கள் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்! இந்த ப்ராஜெக்டை, நீங்கள் கேட்கும் காலக்கெடுவுக்குள் நாங்கள் இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்பதே என் கருத்து !!!!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 11, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 5

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

4 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா ...

2 அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு, கூடச்சொல்வது காவிரியாறு....

3. காலம் மாறினால் காதலும் மாறுமோ, மாறாது, மாறாது ...

4. மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டாள் ...

5. அன்னம் போல நடை நடந்து வந்து என்னருகமர்ந்து நாணத்தோடு ...

6. பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுதோ ...

7. இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா ...

8. சின்னக்குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை...

9. காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் ...

10. தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா ...

11. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா...

12. அருகில் வந்ததும் உருகி நின்றதும் உறவு தந்ததும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

Sunday, January 29, 2006

ஓர் அவசரச் செய்தி -- பாகிஸ்தான் 65 / 6 !!

இன்று தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் 3-வது டெஸ்ட் போட்டியில், இர்·பான் பதான் தனது முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி (HATRICK) சாதனை படைத்துள்ளார் !!!! வீழ்ந்த மூவரில், யூனுஸ் கானும், யூசுபும் தொடர்ந்து இந்தியாவுக்கு (முதல் 2 டெஸ்ட்களில்) தொல்லை கொடுத்து வருபவர்கள்.

சல்மான் பட் டிராவிட்டிற்கு காட்ச் வழங்கியும், யூனுஸ் LBW ஆகியும், மொஹமட் யூசுப் Clean Bowled ஆகியும் (மூவரும் ரன் எடுக்காமலேயே) விக்கெட்டுக்களை இழந்தனர் !!!

அடுத்து, சகீர் கான் தன் பங்குக்கு 2 விக்கெட்டுக்களை (பைசல் இக்பால் மற்றும் அபாயகரமான ஷாஹித் அப்ரிடி ஆகியோரை) வீழ்த்தினார். அப்ரிடி, கண்ணை மூடிக் கொண்டு அடிக்கப் போய் Clean Bowled ஆனது பார்க்க அம்சமாய் இருந்தது !!!

இறுதியாக, தொடக்க ஆட்டக்காரராக வந்து சற்று தாக்கு பிடித்து வந்த இம்ரான் ·பரட், இளம் பந்து வீச்சாளர் RP சிங் பந்து வீச்சுக்கு விக்கெட்டை இழந்தார்.

இந்தியா டாஸில் வென்றது நல்லதாகப் போயிற்று !!! கராச்சியின் Green Top ஆடுகளம், பாகிஸ்தானுக்கு (ஒரு மணி நேரத்திலேயே!) பலிபீடமாகிப் போனது !! எப்படியோ இந்தியா வெற்றி பெற்றால் சரி தான் !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 28, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 4

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ...

2 முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி....

3. விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா ...

4. பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது ...

5. குங்குமம் வைத்தவன் சங்கமம் ஆவது இருவரின் நெஞ்சினிலே ...

6. எனது தெய்வம் வேறெங்கும் இல்லை ...

7. திருமணத்துக்கு முன் மனதை மூடும் .... மோகம் ...

8. இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்...

9. அன்னையைப் பார்த்த பின் என்ன வேண்டும் ...

10. நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே ...

11. முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்...

12. என் தணலும் நீர் போல் குளிரும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, January 24, 2006

Star6. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! ((மீள்பதிவு)

அந்திமழையில் பதிப்பிக்கப்பட்டது

**************************************************

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர். ஒருவர் அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை.

சாரதி செஸ் கிளப்பில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள், அதன் தலைவரான, 'சார்' என்றழைக்கப்பட்ட, எம்.காம். படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன், கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த வேணு (அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்'வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள். அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடைபெற்றது!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, மிக லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடிக்கார இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வச்சுட்டு வாங்க. இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று வேணுவை சுட்டிக் காட்டி கூறினார். வேணு, "சார், நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறார். ஒரு வாய்ப்பு தரலாமே" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவைச் சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது.

வேணு எங்களிடம் செய்வது போலவே, தனக்கு வெள்ளைக் காய்கள் என்று தானே நிர்ணயித்துக் கொண்டு, காய்களை செஸ் போர்டில் வரிசைப்படுத்தினார். இந்த மட்டும் ஆட வாய்ப்பு தந்தார்களே என்று
தாடிக்காரரும், அதற்கு ஆட்சேபிக்காமல், கறுப்புக் காய்களைஏற்றுக் கொண்டார்! வேணுவின் முதல் நகர்த்தல் P-K4. தாடியும் P-K4! அடுத்து, வேணுவின் P-KB4 என்ற மூவ், 'King's Gambit'க்கு தாடிக்காரருக்கு அழைப்பு விடுத்தது. வேணு, 'King's Gambit'-ஐ தொடர்ந்து ஆட்டம் செல்லக் கூடிய பலவித சாத்தியங்களிலும் விற்பன்னன் என்பதால், தாடி அந்த 'அழைப்பை' ஏற்பாரா, நிராகரிப்பாரா என்று எங்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தாடி, PK4 X PKB5 என்று வேணுவின் சிப்பாயை வெட்டி வீழ்த்தி 'King's Gambit'க்கான அழைப்பை ஏற்றவுடன், 'தாடி கோணிக்குள் ஏதாவது செஸ் புத்தகம் வைத்திருக்கிறதோ' என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த வேணு பத்து நகர்த்தல்களுக்கு பிறகு, எதிராளியின் சரியான பதில் மூவ்களைக் கண்டவுடன், யோசித்து ஆட ஆரம்பித்தார். வேணுவும் தாடியும் எதிர்மறையாக 'castle' செய்தவுடன், செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. வேணு ஒரு யானையையும், ஒரு விதூஷகரையும், ஒரு சிப்பாயையும் இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை!

இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்கத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேணுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு செஸ் போர்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். குப்பை இளைஞரின் முகத்திலோ எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை. இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், வேணுவிடம் ராணி, ஒரு விதூஷகர், ஒரு குதிரை மற்றும் மூன்று சிப்பாய்களும், தாடியிடம், இரண்டு யானைகளும், இரண்டு குதிரைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன.

வேணு திடீரென்று, "யாரும் ஜெயிக்க முடியாது போலிருக்கு! டிரான்னு வச்சிக்கலாம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க, இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க" என்றார். பயங்கரக் கடுப்பான வேணு, ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். அப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வேணுவின் தாக்குதலை திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, வேணுவிடமிருந்து மேலும் இரண்டு சிப்பாய்களை வீழ்த்தி விட்டார்.

ஒரு தேர்ந்த 'முடிவாட்ட' (END GAME) விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி, தாடிக்காரர் வேணுவின் ராஜாவை சந்திக்கு இழுத்தார். 'தொடர் செக்' (Perpetual Check) வழியிலாவது தப்பித்து டிரா செய்து விடலாம் என்ற நம்பிக்கையால் (தாடிக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை வேணு அவமானமாக எண்ணியிருக்கலாம் என்பது என் யூகம்!) ,வேணு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தாடிக்காரர் வேணுவை நோக்கி, "செக் மேட்! ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா. நன்றிங்க." என்று கூறி விட்டு தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். சரியாக மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாகத் திரண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சற்று நேரம் பிடித்தது. நான் தாடிக்காரர் சென்ற வழியில் ஓடி, அவரை இடைமறித்து, "ஒங்க பேர் என்னன்னு சொல்லலியே?" என்று வினவியதற்கு, அவர், "அரசன்னு தெரிஞ்சவங்க கூப்பிடுவாங்க, தம்பி" என்று சொல்லி விட்டு போய் விட்டார். அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச்
சென்றதாகவே எனக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல திண்ணை செஸ் ஆட்டங்களும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போயின. சார், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாகக் கேள்வி. வேணு பொறியியல் படிப்பு முடிந்து, IIM, பெங்களூரில் மேலாண்மை படிப்புக்குப் பிறகு, பணி நிமித்தம் மும்பை சென்று விட்டார். அதன் பின் தொடர்பு இல்லை. திருவல்லிக்கேணி வீட்டை காலி செய்து போன ரமணி, தேசிய அளவில் செஸ் விளையாடியதாக, பின்னாளில் அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். எனக்கும் செஸ்ஸ¤க்கும் ஆன தொடர்பு, ஆங்கில தினசரிகளில் இடம்பெறும் செஸ் புதிர்களை ஆராய்வதோடு நின்று போனது!
*******************************************

நாலைந்து வருடங்களுக்கு முன், மும்பையில் எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க மதுரைக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ள விஸ்வநாதபெரி என்ற கிராமத்துக்கு, சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். நண்பரின் தந்தையார் பண்னையார் என்பதும், அவருக்கு கிட்டத்தட்ட 200 ஏக்கர் விளைநிலம் இருப்பதும், அங்கு சென்ற பிறகே எங்களுக்கு தெரிய வந்தது. பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!

நண்பருக்கு விடை கொடுத்து, கிராமத்திலிருந்து மதுரை வந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், போக்குவரத்து நெரிசலால், பேருந்து நின்று விட்டது. எப்போதும் போல் நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்துக் கடை ஒன்றில் வெள்ளை வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து, தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர் கடையில் வேலை செய்யும் சின்னப்பையனை பார்த்து, "பழைய புக்கா இருந்தாலும், என்ன புக்குனு பார்க்காம இப்படி கிழிக்கலாமா ? இந்த புக்ல என்ன இருக்குன்னு ஒனக்குத் தெரியுமா? பள்ளிக்கூட பசங்க யாருக்காச்சும் குடுக்கலாம்னு இருந்தேன்" என்று திட்டிக் கொண்டிருந்தார். புக்கின் அட்டையில் ராஜா படம் மாதிரி ஏதோ தெரிந்தது.

நெரிசல் நீங்கி பேருந்து சற்று முன்னோக்கிச் சென்றவுடன், ஞாபகத்தில் பொறி தட்டியது. கழுத்தைத் திருப்பிக் கடையை மறுபடியும் பார்த்தேன். "அரசன் வேஸ்ட் பேப்பர் மார்ட்" என்று எழுதியிருந்த சிறிய பலகை கடையில் தொங்க விடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது!
********************************

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 14, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 3

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் ...

2 மாலைக்கு மாலை காதலன் பேசும் பேச்சுக்கள் பேசிட வேண்டும்....

3. எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ பிறக்கும் ஜென்மங்கள் ...

4. வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் ...

5. தென்றல் தாலாட்ட தென்னை இருக்க ...

6. ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால் தான் நனவுகள் ஆகும் ...

7. என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் அதில் என்னென்ன வண்ணங்கள் ...

8. ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க வைத்தான்...

9. மனம் கங்கை நதியான உவமை ...

10. பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் ...

11. விழிகளே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா...

12. எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாள் ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 07, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 2

Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட !

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே ...

2 நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்....

3. அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை ...

4. அங்கம் எங்கெங்கும் ஆனந்த கங்கை ...

5. இது மாறாதென்றான் இனி நீயே என்றான் ...

6. ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை ...

7. ஆசை வரும் வயது உந்தன் வயது பேசும் இளம் மனது ...

8. நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்...

9. காலமகள் பெற்ற மகள் இரவினிலும் மலர்ந்தாள் ...

10. நடை போடு நடை போடு மனமெனும் தேரில் அழகான மயில் போலவே ...

11. தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்...

12. அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன், அச்சம் கொண்டு...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, January 01, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 1

Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. எனக்காக வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம், பனி கொண்ட பார்வை ...

2. பொன்னிடம் பாதி, உன்னிடம் பாதி மின்னுவதென்ன சொல்லடி தேவி...

3. உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே ...

4. நீராட நீ செல்லும் யமுனா நதி, மங்கல மங்கையர் மேனியில் ...

5. காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது, இதழுடன் இதழாட ...

6. மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம் ...

7. வெயில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன, காணாத கண்கள் ரெண்டில் ...

8. கொடுத்தால் தானே வாங்கிக் கொள்ள, படுத்தால் தானே விழித்துக் கொள்ள...

9. நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ...

10. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ...

11. இருளுக்குப் பின் வரும் ஜோதி, இது தான் இயற்கை...

12. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 25, 2005

புகை வேலைக்குப் பகை

இன்று ஒரு செய்தி கண்ணில் பட்டது. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி பணிக்குச் சேர்ந்து முக்கால் மணி நேரத்தில், தன் மேலாளரிடம் தான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டு வேலையை இழந்தார் ! டாடா ·ப்ளோ கம்யூனிகேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம், அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !

ஒருவர் பணிக்கு ஏற்றவரா என்று நிர்ணயிப்பதற்கு பல முக்கியத் தகுதிகள் இருக்கையில், புகை பிடிப்பவர் பணியில் சேர தடை விதிக்கும் நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை கோரப் போவதாக ஸோ·பி என்ற அப்பெண் கூறியிருக்கிறார். நேர்முகத் தேர்வின் போது புகை பிடிப்பது குறித்து தன்னை எதுவும் கேட்காமல் விட்டது யார் குற்றம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகமோ, தங்கள் பாலிசி சட்டத்திற்குட்பட்டது தான் என்றும், அவ்வாறு புகை பிடிப்பவரை பணியில் சேரா வண்ணம் நேர்மறையாக ஒதுக்குவதில் (positive discrimination) நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும் மார் தட்டுகிறது! புகை பிடிப்பவரின் உரிமையை வலியுறுத்தும் FOREST என்ற அமைப்போ, நிறுவன வளாகத்துள் புகை பிடிக்கத் தடை விதிப்பது என்பது வேறு, புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்த தடை என்பது அராஜகம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தா, நம்ம அமைச்சர் அன்புமணி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுதுங்க, என்ன நான் சொல்றது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: Deccan Chronicle

Saturday, December 17, 2005

நன்றி கெட்ட மாந்தரடா! Ganguly அறிந்த பாடமடா!

இந்திய கிரிக்கெட்டில் அரசியலும், அநியாயச் சார்பும், டால்மியாவின் இரும்புப் பிடியிலிருந்து கிரிக்கெட் வாரியம் விடுபட்டதால், குறைந்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், டெஸ்ட் அணியிலிருந்து கங்குலியை நீக்கிய செயல், எதுவும் மாறவில்லை என்பதை நிரூபித்துள்ளது! கங்குலியை விலக்கியதற்கு நாற்றமிகு அரசியலே காரணம் என்று எண்ணுவதற்கு காரணங்கள் உள்ளன! இத்தனைக்கும், தில்லி டெஸ்டில் அவர் அணியின் நலன் கருதி பொறுப்பாகவே விளையாடினார். முதல் இன்னிங்க்ஸில் சச்சினுடனும், இரண்டாவதில் யுவராஜுடனும் கங்குலி கூட்டு சேர்ந்து விளையாடியதில், அணிக்கு முறையே 121 ரன்களும், 81 ரன்களும் கிடைத்தன. அவற்றில், கங்குலி எடுத்தது, 40 மற்றும் 39 ரன்கள். தகுதி அடிப்படையில் அவர் நீக்கப்பட்டார் என்றால், அவரை விட 2 ரன்களே அதிகம் எடுத்த லஷ்மண் மற்றும் 2 டெஸ்டுகளில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்திய அகர்கரும் என்ன கிழித்தார்கள் ?

கிரன் மோரே என்னும் மடையரின் தலைமையில் உள்ள தேர்வுக்குழு தாங்கள் ஜோக்கர்கள் என்பதை உணர்த்தியுள்ளனர் ! தேர்வுக்குழு தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக, மோரே எப்படி பச்சோந்தியாக மாறி பவார் தரப்புக்கு ஓடினார் என்பது நாம் அறிந்தது தான்! கங்குலியின் பல செயல்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், எதற்கு அவரை 'ஆல்ரவுண்டர்' என்று கூறி அணியில் சேர்த்து விட்டுப் பின் நியாயமான காரணமின்றி விலக்க வேண்டும் என்பதே ஆதாரக் கேள்வி. திமிர் பிடித்த மோரே தேர்வுக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், கங்குலி நான்காம் இறக்கத்தில் (4 DOWN) ஆட வருவது தனக்கு விருப்பமில்லை என்கிறார்!!! இவரது தனிப்பட்ட விருப்பத்தை யார் கேட்டார்கள் ? கிட்டத்தட்ட 15000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ள ஒருவரை, கவைக்குதவாத ஐந்து ஜால்ராக்கள் தூக்கி எறிவதைப் பார்க்கும்போது எரிச்சல் மண்டுகிறது !!!

கிரன் மோரையை விடுத்து மீதமுள்ள நான்கு உறுப்பினர்களில் இருவருக்கு கிரிக்கெட் விளையாட்டுடன் ஸ்நானப்பிராப்தி கிடையாது ! மற்றும் பூபிந்தர் சிங் என்பவர் 2 ஒரு நாள் போட்டிகளிலும், VB சந்திரசேகர் 5 ஒரு நாள் பந்தயங்களிலும் விளையாடி இருக்கின்றனர் ! தேர்வுக்குழுவில், எப்பேர்ப்பட்ட கிரிக்கெட் அனுபவம் நிறைந்திருக்கிறது, பாருங்கள் !?! இதில், அடிப்படைப் பிரச்சினை, தேர்வுக்குழு உறுப்பினரின் நேர்மை, கிரிக்கெட் அறிவு மற்றும் அனுபவம் ஆகியவை கேள்விக்குறி ஆகி விட்டன.

தேர்வுக்குழு உறுப்பினர் என்பவர், குறைந்த பட்சம் 25 டெஸ்ட்களிலோ, 40 ஒரு நாள் போட்டிகளிலோ விளையாடியவராக இருப்பது ஓர் அவசியமான தகுதியாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுளது. மேலும், தேர்வுக்குழுவை நிறுவதில் வெளிப்படையான ஒரு தேர்வு முறை இருப்பதும், உறுப்பினர்களுக்கு தகுந்த ஊதியமும் வழங்கப்படுவதும் அவசியமாகிறது. நல்ல சன்மானம் இல்லாததால் தான், திறமை மிக்க ரவி சாஸ்திரி, நவ்ஜோத் சித்து, மொகிந்தர் அமர்நாத் போன்றவர்கள் உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை.

கங்குலி விலக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாப்பல், கங்குலி நன்றாக விளையாடுவதாக நம்பிக்கை தெரிவித்து விட்டு, அடுத்த நாள் தேர்வுக்குழு கூட்டத்தில் என்ன கூறினாரோ ? அதனால், கங்குலியின் நீக்கத்தில், அணியை நல்ல முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கும் சாப்பலுக்கும், டிராவிட்டுக்கும் பங்கிருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. டிராவிட் கூறிய, "That is the way International cricket is!" மற்றும் கங்குலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் குறித்துக் கூறிய, "They don't represent the Indian public" போன்றவை மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! கேப்டன் ஆன சில மாதங்களிலேயே இப்படி ஒரு மாற்றமா ? இத்தனைக்கும் இதே டிராவிட் ஒரு நாள் பந்தயங்களுக்கு லாயக்கிலாதவர் என்ற சர்ச்சை எழுந்தபோது, கங்குலி அவருக்கு தோள் கொடுத்தவர் தான் !

லஷ்மிபதி பாலாஜியும், சகீர் கானும் அணியில் இடம் பெறாததற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. சகீர் கானிடம் திறமை இருந்தாலும், Attitude சரியில்லை என்று சொல்லப்படுகிறது. அதை சரி செய்து, அவரது திறமையை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதும் பயிற்சியாளரின் பணிகளில் ஒன்று இல்லையா ? இல்லையெனில், எதற்கு சாப்பலுக்கு இவ்வளவு தண்டம் அழ வேண்டும் ? பாப் உல்மர், attitude சரியில்லாத ஷோயப் அக்தரை மாற்றி, அவரை சரியான வழியில் நடத்திச் சென்றதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் 2-0 டெஸ்ட் தொடர் வெற்றியில், அக்தர் பிரகாசிக்கவில்லையா ?

சமீபத்திய இந்திய வெற்றிகளுக்குப் பின், இப்போதுள்ள இந்திய அணியை, சாப்பலும் டிராவிட்டும் உருவாக்கியது போல ஒரு மாயை நிலவுகிறது. ஓரளவு அணிக்கு மெருகு கூடியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. போகப் போகத் தான் பார்க்க வேண்டும்! கங்குலி சில தவறுகள் செய்திருக்கிறார். ஆனால், வீரேந்திர சேவாகை துவக்க ஆட்டக்காரராக பரிமளிக்க வைத்தது, யுவராஜையும், ஹர்பஜனையும் பல வாய்ப்புகள் தந்து அணியில் தக்க வைத்துக் கொண்டது, தோனியையும், கை·பையும் ஊக்குவித்தது என்று சில நல்ல விஷயங்களுக்கும் அவர் காரணமாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவரை, அவர் நீக்கப்பட்டவுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைப்பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், சக ஆட்டக்காரர்கள் நிராகரித்தது வேதனையான ஒரு விஷயம் ! "நன்றி கெட்ட மாந்தரடா, கங்குலி அறிந்த பாடமடா!" (இப்பதிவின் தலைப்புக்கு காரணம் வேண்டும் அல்லவா !!!) என்று தான் சொல்ல வேண்டும் !

கங்குலிக்கு இப்போது எழுந்துள்ள ஆதரவை வைத்துப் பார்க்கும்போது, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றால் கூட, மேற்கு வங்க அரசியலில் அவருக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே தோன்றுகிறது :-) கங்குலியின் நீக்கம் குறித்து பாராளுமன்றத்தில் கூட விவாதம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 04, 2005

வருணனுக்கு ஒரு திறந்த மடல் !

அன்பு (இல்) வருணா,

நலமா ? நாங்கள் நலமில்லை ! நீர் அனுப்பிய நீர் போட்ட ஆட்டத்தில், நார்மலாக கலகலப்பாக இருக்கும் ஐகாரஸ¤க்குக் கூட டிப்ரஷன் வந்து, உங்களுக்கு ஒரு லெட்டர் தட்டி விட்டுள்ளார்! பிரகாஷ் கூறியது போல், நான் கூட ஓரிரு தடவை, மழையில் மாட்டிக் கொண்டபோது, "சனியன் பிடித்த மழை" என்று கோபத்தில் உம்மைத் திட்டியிருக்கிறேன். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா ? நானும் (என் பங்குக்கு) இந்த மடலை எழுதுவதற்குக் காரணம், பலர் சேர்ந்து எடுத்துரைத்தாலாவது, தமிழக மக்களுக்கு உம்மால் ஏற்பட்ட அவதியை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை தான் ! தைரியசாலியான டோண்டு ராகவன் கூட, தண்ணீர் புகுந்த தன் நங்கநல்லூர் வீட்டில் கலவரத்தில் இருக்கிறார் என்பது அவரது "மழை"ப் பதிவுகளில் தெரிகிறது !

கடந்த சில வருடங்களாக கோயில் கோயிலாக பூசை செய்தும், தமிழகம் பக்கம் எட்டிப் பார்க்காத தாங்கள், இவ்வருடம் முன்னதாகவே அழையாத விருந்தாளியாக வந்து, பொழிந்து தள்ளி விட்டதன் விளைவாக, தமிழ்நாடு அமிழ்நாடாகி விட்டது, சென்னை நீர் நிரம்பிய தொன்னை போல் காட்சியளிக்கிறது! ஏதோ வந்தோமா, ரெண்டு காட்டு காட்டினோமா, போனோமா என்றில்லாமல், இப்படி அழும்பு பண்ணினால் எப்படி ? உமது கைங்கர்யத்தால், இவ்வளவு நாள் பெயர் கேள்விப்படாத ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிரம்பி வழிவதை பார்க்கிறோம் !

சாலைகள் சீரழிந்து, பல கிராமங்கள் விழுங்கப்பட்டு, பயிர்களையும், உயிர்களையும் இழந்து, உங்களால் எம் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு உம்மைத் தொடவில்லையா ? நிலைமை ஓரளவு சீரடையவே பல மாதங்கள் ஆகும் என்று தோன்றுகிறது, பல கோடி செலவு செய்து பொருளாதாரத்தையும் சீரமைக்க வேண்டும். தொடர்ந்து, ககன்தீப் சிங் போன்ற நல்ல, திறமையான மாவட்ட ஆட்சியாளர்களையே நீர் பாடாய் படுத்துகிறீர்! அவர்களும் அயராது மக்கள் துயர் துடைக்க போராடி வருகின்றனர்.

நீர் அடித்த லூட்டியால், எப்போது போல, ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி பரிதவிக்கின்றனர். எப்போது போல், அரசியல்வாதிகள், மழையால் ஏற்பட்ட மக்கள் பிரச்சினைகளை வைத்து, வரும் தேர்தலை எதிர் கொள்வதைப் பற்றி யோசித்து வருகின்றனர்! நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலாவது, ஆட்சியில் உள்ள அதிமுகவினரும், திமுகவினரும் இணைந்து செயல்படுவார்கள் என்ற உம் எண்ணத்தில் மண் தானே விழுந்தது ?!? ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற உமது பேராசையால், தற்போது, முப்பது நிமிடச் செய்திகளில், 27 நிமிடங்கள் தமிழகத்தில் உங்கள் கொட்டம் பற்றிய பேச்சு தான் ! வருண உபயத்தில், தமிழக வானிலை மையமும், அதன் இயக்குனரும் கூட ஊடக வெளிச்சத்தில் !

இந்த வாரத்தின் முதல் நான்கு நாட்கள் மழையின்றி சற்று உலரத் தொடங்கியிருந்த சென்னையில், சரியாக டெஸ்ட் மேட்ச் தொடங்கவிருக்கும் அன்று, Baaz-யை ஓர் உலுக்கு உலுக்கி, பேய் மழையை வரவழைத்து, கிரிக்கெட் ரசிகர்களை கடுப்படித்தீர்கள் ! உமக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் உள்ள பிரச்சினையில், எங்களை இப்படி அலைக்கழிக்கலாமா ? நீங்கள் ஹை பிரஷரில் பீடிக்கப்பட்டதாலோ என்னவோ, வங்கக் கடல் மேலே எந்நேரமும் லோ பிரஷர் !

திருப்பாவை நாச்சியார், "மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் (ரொம்பாவாய் அல்ல!)" என்று தானே உம்மை வேண்டினார் ? மாறாக, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலேயே மக்களை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்து இப்படி பாடாய் படுத்தினால், மார்கழியில் நீராட தெம்பு வேண்டாமா ? "வாழ உலகினில் பெய்திடாய்" என்பதை "தாழ உலகினில் பெய்திடாய்" என்று புரிந்து கொள்ளுதல் முறையா ?

இறுதியாக, "துளித்துளி துளித்துளி மழைத்துளி, அது தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி", "மழையே, மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா", "மழை வருது மழை வருது குடை கொண்டு வா, மானே உன் மாரப்பிலே", "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், நீயும் ஒத்துக்கிட்டு கூட வர வேணும்", "நீ வரும்போது நான் மறைவேனா" என்று அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எங்கள் திரைப்படங்களில் கதாநாயகிகளை மழையில் நனைய வைத்து, உம்மைக் குஷிப்படுத்தியதற்கு நீர் காட்டும் நன்றி விசுவாசம் இது தானா ?!?

என்னவோ போங்க, ஒண்ணும் சரியில்ல !

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: எனக்கென்னவோ, தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்ட நிலையில், வானிலை மையம் தினமும் (குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறதோ இல்லையோ!) "இன்று கனமழை பெய்யும், பலத்த காற்று வீசும்!" என்று சும்மாங்காட்டியும் அறிக்கை விட்டாலே, வருணன் தன் வேலையை நிறுத்திக் கொள்வார் என்று தோன்றுகிறது ! தற்போதைய சூழலில், வானிலை மையத்திடம் கேட்டுப் பார்த்தால், இதற்கு ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் ;-)

சற்று சீரியஸாக, மழையால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திற்கு, நாம் கூட்டாக, ஒரு சிறிய அளவில் உதவி செய்யலாமே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Saturday, November 26, 2005

Dalmiya-வின் ஆடுகள அரசியல்

டால்மியாவும் அவரது அடிவருடிகளும் சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய அபத்த அரசியல் நாடகத்தின் விளைவாக, கல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று மண்ணைக் கவ்வ நேர்ந்தது. பொதுவாக, எந்தவொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும், இன்னொரு நாட்டு அணி தம் நாட்டில் விளையாட வரும்போது, தமது அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது, நடைமுறையில் காணப்படும் ஒன்றாகும்.

இதற்கு மாறாக, பிரபிர் முகர்ஜி என்ற திமிர் பிடித்தவரின் மூளை குழம்பியதின் விளைவாக, அவர் "SPORTING WICKET" என்ற பெயரில், KINGSMEAD-க்கு இணையான ஆடுகளம் ஒன்றை உருவாக்கியதற்கு, BCCI-யில் தற்போது நிலவி வரும் உட்பூசலும் ஒரு முக்கியக் காரணமாகும். பணம் கொடுத்து, பல மணி நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, பலவித சிரமங்களுக்கிடையில் அரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றிய, வெறுப்பேற்றிய இந்தக் கோமாளி பிரபிர் முகர்ஜியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்று தெரியவில்லை ?!?!

இதே போல், கடந்த வருடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, ஷரத் பவாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் சங்கம் , டால்மியாவைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, நாக்பூரில் பசுமையான ஆடுகளத்தை தயாரிக்க வைத்து, கிரிக்கெட் வீரர்களை (கிரிக்கெட்டையும்!) பலிகடாக்களாகவும், ரசிகர்களை முட்டாள்களாகவும் ஆக்கியது குறிப்பிட வேண்டியது. கிரிக்கெட் அரசியலில் "தாதா"வான கங்குலி கடைசி நிமிடத்தில் (உடல்நிலையை காரணம் காட்டி!) ஆட்டத்திலிருந்து விலகினார்! டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் (பல வருட காத்திருப்பிக்குப் பின்!) கைப்பற்றியது.

ஏற்கனவே, கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப் படாததால் கடுப்பில் இருந்த, நேற்று மைதானத்திலிருந்த கங்குலி ரசிகர்கள் (வெறியர்கள்!) இந்தியா 71-5 என்று சரிந்தபோது, "டிராவிட் ஒழிக", "சாப்பல் ஒரு கழுதை", "சச்சின் ஹை ஹை" என்று (டால்மியாவும், முன்னாள் கேப்டனும் எதிர்பார்த்தது போலவே!) கூக்குரலிட்டனர்! பொதுவாக, நேற்று கொல்கத்தாவில், தென்னாப்பிரிக்காவுக்கு பலத்த ஆதரவு காணப்பட்டதில், கொல்கத்தா கிரிக்கெட் வெறியர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை!

கங்குலி டெஸ்ட் அணியில் "ஆல்ரவுண்டர்" (கிரன் மோரேயின் கூற்றின்படி!) என்ற போர்வையில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதில், திடீரென்று அவர் எப்படி ஆல்ரவுண்டர் ஆனார் என்பது புரியாத புதிர்! அப்படியானால், கபில்தேவையும், ·பிளின்டா·வையும், இம்ரான் கானையும் என்னவென்று அழைப்பது ??? என்ன ஒரு கேலிக்கூத்து இது ? இதனால், சமீபத்திய உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ஆடிய ஜகீர்கான் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது.

அணிக்குள் பின்புறக் கதவு வழியாக பிரவேசித்திருக்கும் கங்குலி, ஏதாவது அரசியல் பண்ணி, அணியின் ஒற்றுமையைக் குலைத்து, டிராவிட்டுக்கு தலைவலி தர மாட்டார் என்று நம்புவோம்!!! அதற்கு, வரும் BCCI தேர்தல், டால்மியாவுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். BCCI-யிலும் மாநில அளவிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் சில அரசியல் தரகர்கள் நடத்தும் கேவலமான அரசியல் விளையாட்டிலிருந்தும், அதனால் ஏற்படும் அவல நிகழ்வுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்கு என்று தான் விடிவு காலம் வருமோ ?! உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், நேற்று நடந்தேறிய கூத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்து வரும் இரண்டொரு ஆட்டங்களை புறக்கணித்தாலாவது, BCCI திருந்துவதற்கு வழி பிறக்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 21, 2005

கலாச்சாரக் கோவலர்கள் - உஷார்

குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!

குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?

"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!

லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?

குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்

நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails